சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்க்காக சன்னிதானம், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை நடைபெற இருப்பதால் அதற்கான ஆயத்த பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் டிராக்டர்கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து , மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவிலின் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது.
மகரவிளக்கு பூஜை காலத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு கருதி இளம் பெண்கள் யாரும் சபரிமலைக்கு வர வேண்டாம் என்று தேவசம் போர்டு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், பெண்கள் தொடர்ந்து ஐயப்பன் கோவிலுக்கு வர முயற்சிப்பதால், பம்பை, சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் வருகின்ற ஜனவரி 5-ம் தேதி வரை, 144 தடை உத்தரவை நீட்டிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…