காற்று மாசுபாட்டால் திணறும் தலைநகர்:2-நாள் பொது முடக்கம் போடலாமா? – உச்சநீதிமன்றம் கண்டனம்

Published by
Edison

டெல்லி:தலைநகரில் மாசு அளவைக் கட்டுப்படுத்த டெல்லியில் இரண்டு நாட்களுக்கு பொது முடக்கம் அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

நாட்டின் தலைநகர் டெல்லியில் மற்றும் அருகிலுள்ள நகரங்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக புகை மூட்டத்தில்(காற்று மாசுபாட்டில்) மூழ்கியுள்ளது.இதனால்,வாகன ஓட்டிகள் பகல் நேரத்திலேயே விளக்குகளை எரிய விட்டு செல்கின்றன.அங்கு நிலவும் காற்று மனிதர்கள் சுவாசிப்பதற்கு தகுதியானது அல்ல என்ற நிலையில் காற்றின் தரம் உள்ளது.இங்கு பல்வேறு இடங்களில் AQI எனப்படும் காற்றின் தரக்குறியீடு 400-யை தாண்டி நிற்கிறது.டெல்லியில் காற்றை சுவாசிப்பது என்பது “ஒரு நாளைக்கு 20 சிகரெட்” புகைப்பது போன்றது என்று கூறப்படுகிறது.

இதற்கு அண்டை மாநிலங்களில் எரிக்கும் விவசாயக் கழிவுகள், அதிக வாகன பயன்பாடு மற்றும் நெரிசல் ஆகியவை காரணமாக இருந்து வருகிறது.

இந்நிலையில்,இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.இதனை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு நீதிபதிகள் கூறியதாவது:

“டெல்லியில் இருப்பது என்பது ஒருவர் 20 சிகரெட்டுகளை குடிப்பதற்கு சமம் என்று மாநில அரசு தெரிவித்தது.சூழ்நிலையின் தீவிரத்தை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.ஆனால்,நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்.

எனவே,அவசர நடவடிக்கைகளை எப்படி எடுக்க திட்டமிட்டுள்ளீர்கள்?,AQI (காற்றுத் தரக் குறியீடு) அளவைக் குறைப்பதற்கான உங்கள் திட்டம் என்ன?,மத்திய,மாநில அரசுகளின் பொறுப்பைத் தாண்டி இந்த சிக்கலைப் பாருங்கள்,இதற்காக தேவைப்பட்டால் 2 நாட்களுக்கு பொது முடக்கத்தை அறிவியுங்கள்”,என்று தெரிவித்துள்ளனர்.

மேலும்,விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறியதாவது:”கடந்த சில நாட்களாக டெல்லியில் ஏற்பட்டிருக்கும் காற்று மாசுபாட்டிற்கு பஞ்சாபில் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவதே காரணம்.இதனை அந்த மாநில அரசு தடுக்க வேண்டும்”, என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி அமர்வு:”விவசாயிகள் மீது ஏன் குற்றம் சுமத்துகிறீர்கள்?,அவர்களால் குறிப்பிட்ட அளவுதான் காற்று மாசு ஏற்படுகிறது.ஆனால்,கடந்த 7 நாட்களில் எவ்வளவு பட்டாசு வெடிக்கப்பட்டுள்ளது என கவனித்தீர்களா?,மேலும்,காற்று மாசுபாடு தொடர்பான மற்ற காரணங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?,டெல்லியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்ன செய்கிறது?,மேலும்,எங்கள் வீடுகளில் கூட நாங்கள் முகமூடி அணிந்திருக்கிறோம்.டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது?,அடுத்த 2-3 நாட்களுக்குள் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்”,என்று தெரிவித்துள்ளது.

Recent Posts

INDvsPAK: நீயா? நானா? வெற்றி வாகை யாருக்கு! டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்.!!

INDvsPAK: நீயா? நானா? வெற்றி வாகை யாருக்கு! டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்.!!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…

47 minutes ago

IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!

உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…

2 hours ago

ஸ்பெயின் கார் ரேசில் மீண்டும் விபத்து… அஜித்-ன் கார் விபத்து எப்படி நடந்தது?

ஐரோப்பா : ஸ்பெயின் நாட்டில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார்…

3 hours ago

தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து… உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!

தெலுங்கானா : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையின் நேற்று ஒரு பகுதி…

4 hours ago

இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!

சென்னை : இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா VS பாகிஸ்தான் போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் பிற்பகல் 2.30 மணிக்கு…

4 hours ago

AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!

லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…

16 hours ago