இனி பணம் எடுக்க கட்டுப்பாடு.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

Published by
murugan

கர்நாடக மாநிலத்தை மையமாகக் கொண்ட டெக்கான் அர்பன் கூட்டுறவு வங்கியில் புதிய கடன்களை வழங்கவோ அல்லது டெபாசிட் செய்ய தடை விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி நேற்று தெரிவித்துள்ளது.

மேலும், வங்கியின் தற்போதைய பண நிலையைப் கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து 1000-க்கு மேல் திரும்பப் பெற முடியாது. இது அனைத்து கணக்கு வைத்து இருபவர்களும் பொருந்தும்.

இது ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தவொரு புதிய முதலீடும் அல்லது புதிய பொறுப்பையும் முன் ஒப்புதல் இல்லாமல் எடுக்க கூட்டுறவு வங்கிக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. நிதி நிலைமை மீண்டு வரும் வரை வங்கி முன்பு போலவே இயங்கும். இந்த அறிவுறுத்தல்கள் நேற்று மாலை முதல் ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை நோக்கத்திற்காக டெக்கான் நகர கூட்டுறவு வங்கி தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் வங்கியின் உரிமம் ரத்து செய்யப்படவில்லை. இதனால், வாடிக்கையாளர்களின் பணம் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும் என என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்குப் பணம் எடுக்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இருந்தாலும் வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டு உறுதி வழங்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள சுதந்திர கூட்டுறவு வங்கி லிமிடெட்டில் இருந்து ரிசர்வ் வங்கி பணம் எடுக்க நிபந்தனை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago