கல்வி கடன் ரத்தா.? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்..!

Published by
பாலா கலியமூர்த்தி
  • இந்தியா பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதனால் கல்வி கடன்களை ரத்து செய்ய எந்த திட்டமும் இல்லை.
  • உள்நாட்டு உற்பத்தி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
  • 2016-17-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை கல்வி கடன்களின் மொத்த மதிப்பு அதாவது ரூ.67,685.59 கோடியிலிருந்து ரூ.75,450.68 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியா பொருளாதாரத்தில் மந்தநிலை இருப்பதால் கல்வி கடனை ரத்து செய்ய எந்த ஒரு திட்டமும் இல்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 6 ஆண்டுகளில் கடும் சரிவை கண்டுள்ளது. இதனால் தான் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. கடந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.5% சதவீதமாக இருந்தது.

அதே சமயம் பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதால் நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ளது, என தகவல் வெளியாகியுள்ளது. சி.எம்.ஐ.இ என்ற இந்தியா பொருளாதாரத்தை கண்காணிக்கும் அமைப்பின் தரவுகளின் படி நாட்டில் தற்போது வேலையின்மை 7.5% சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வேலையின்மை காரணமாக மாணவர்களின் கல்வி கடனை மத்திய அரசு ரத்து செய்யும் என தகவல் வெளியாகியிருந்தது. கல்வி கடன் ரத்து தொடர்பாக மத்திய அரசு எந்தவொரு நடவெடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்துள்ளார். அதில் 2016-17-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நிலுவையிலுள்ள கல்வி கடன்களின் மொத்த மதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது.

அதாவது இந்தத்தொகை ரூ.67,685.59 கோடியிலிருந்து ரூ.75,450.68 கோடியாக உயர்ந்துள்ளது. கல்வி கடன்கள் மற்றும் அந்த மாணவர்களின் வேலை தொடர்பான தரவுகள் சரியாக இணைக்கப்படவில்லை. அத்துடன் கல்வி கடன்களை வசூலிக்க வங்கிகள் சரியான அணுகுமுறையை கையாளவேண்டும், என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் கல்வி கடன்களை ரத்து செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிற்கு இல்லை என தெரிவித்திருந்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

RCB vs GT : இந்த முறை ‘கிங்’ ஆட்டம் மிஸ் ஆயிடுச்சி., குஜராத் சூழலில் வீழ்ந்த விராட் கோலி! 

RCB vs GT : இந்த முறை ‘கிங்’ ஆட்டம் மிஸ் ஆயிடுச்சி., குஜராத் சூழலில் வீழ்ந்த விராட் கோலி!

பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…

24 minutes ago

இங்க நான் தான் கிங்.! எலான் மஸ்க் முதலிடம்! டாப் 5 உலக பணக்காரர் லிஸ்ட் இதோ..

ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…

1 hour ago

”சேட்டன் வந்நல்லே… சேட்டை செய்ய வந்நல்லே” மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்.!

பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…

2 hours ago

“வக்பு சொத்துகளை மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது!” ஆ.ராசா கடும் தாக்கு!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…

3 hours ago

வக்பு வாரிய திருத்த சட்டம் : பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

3 hours ago

“டெல்லி நாடாளுமன்றமே வக்பு சொத்தா மாறியிருக்கும்” மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

3 hours ago