கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முடிவெடுத்து செயல்படும் இந்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு பிரபலங்கள் பலர் தங்களது கண்டனக் குரலை எழுப்பி வருகிறனர்.
மத்திய அரசு விவசாயிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இதற்கு எந்த தீர்வும் இதுவரை எட்டப்படவில்லை. சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள இந்த விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பல தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் கூறுகையில், ‘ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முடிவெடுத்து செயல்படும் இந்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவ திறனும், பிரதமர் மோடியின் தலைமையும் தொற்றுநோய்க்கு உலகிற்கு முக்கியமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.’ வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு விவசாயிகளுடன் 11 கட்ட பேச்சுவார்த்தைகள் இதுவரை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு…
பாங்காக் : மியான்மர் நாட்டில் இன்று மதியம் வேளையில், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர்…
சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி…
சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர்.…
பாங்காக் : மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட…