என் கணவரை முத்தமிடுவதை உங்களால் தடுக்க முடியுமா? காவல்துறையினரிடம் பெண் அத்துமீறல் – வைரல் வீடியோ உள்ளே!

Published by
Rebekal

ஊரடங்கை மீறிய தம்பதிகள் மீது டெல்லியில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து காவல்துறையினரிடம் நான் என் கணவரை முத்தமிடுவதை உங்களால் தடுக்க முடியுமா என அத்துமீறி பேசிய பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவில் தற்பொழுது உருவாகி நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் தினமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்படுவதுடன், நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கடுமையான கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், வார இறுதியில் ஊரடங்கை அமல் படுத்தியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று முன்தினம் முதல் டெல்லியில் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது போல இரவு நேரத்தில் 10 மணிக்கு பின்பு மக்கள் யாரும் வெளியில் வராமல் வீட்டுக்குள் முடங்கி நிலையிலும் உள்ளனர். இந்நிலையில் வார இறுதி ஊரடங்கை மீறி முறையான காரணங்கள் இன்றி வெளியே செல்லக் கூடிய மக்கள் கைது செய்யப்படுவீர்கள் எனவும், வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் போலீசார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் அதையும் மீறி டெல்லியில் உள்ள தம்பதிகள் இருவர் காரில் முகக் கவசம் அணியாமல் வார இறுதி நாளான நேற்று ஊரடங்கு வெளியில் சென்றுள்ளனர். எனவே அவர்களை தடுத்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்மணி தாங்கள் ஊரடங்கு மதிக்காததை  கருத்தில் கொள்ளாமல், நான் என் கணவருடன் தானே காருக்குள் இருக்கிறேன், நான் ஏன் முகக்கவசம் அணிய வேண்டும்? அப்படியானால் நான் என் கணவருக்கு முத்தம் கொடுப்பதை உங்களால் தடுக்க முடியுமா? என காவல்துறையினரிடம் அத்துமீறி கோபமாக பேசி உள்ளார். இவர் இவ்வாறு நடந்துகொண்டது வீடியோ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

Published by
Rebekal

Recent Posts

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

5 minutes ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

1 hour ago

பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!

டெல்லி : ஆண்டுதோறும்  எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…

1 hour ago

மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!

சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…

2 hours ago

“கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க” உக்ரைனுக்கு எச்சரிக்கை விட்ட ரஷ்யா!

ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…

2 hours ago

படத்துக்காக மட்டும் தான் சிகரெட்…ரசிகர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த சூர்யா!

ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…

3 hours ago