சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா ? நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Default Image

சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நாளை தீர்ப்பு வழங்குவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான முறைக்கேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் அமலாக்கத்துறையின் காவலில் திகார் சிறையில் உள்ளார்.

இதன் காரணமாக அமலாக்கத்துறை வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.ஆனால் அவரது வழக்கை தள்ளுபடி செய்வதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.இதனால் சிதம்பரம் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்தார்.பின்னர் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு முன்னதாக வழக்கு விசாரணைக்கு வந்தபோது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.இந்த நிலையில் தற்போது சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நாளை விசாரிக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk