குடியுரிமை திருத்த சட்டம் குறித்து 10 வரிகள் பேச முடியுமா ? ராகுலுக்கு நட்டா கேள்வி

Published by
Venu
  • உத்திர பிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக கூட்டம் நடைபெற்றது.
  • இந்த சட்டம் குறித்து 10 வரிகள்  ராகுல் காந்தி தொடர்ந்து பேச முடியுமா என்று பாஜக தேசியத் தலைவர் நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.எனவே மத்திய அரசு இந்த சட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகின்றது.
உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர்  ஜெ.பி.நட்டா பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், யாருடைய குடியுரிமையையும்  குடியுரிமை திருத்த சட்டம் பறிக்காது என்பதை மக்கள் உணர வேண்டும்.குடியுரிமை திருத்த சட்டம் மக்களுக்கான சட்டம்.குடியுரிமை திருத்த சட்டம் குறித்து  தொடர்ந்து 10 வரிகள் ராகுல் காந்தி பேச முடியுமா ?  அவ்வாறு அவர் பேசி விட்டால் அவர் சொல்வதை நாங்கள் கேட்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.மேலும் இந்த சட்டம் குறித்து தெரியாத காங்கிரஸ் தலைவர்கள் மக்களுக்கு தவறான கருத்துக்களை பரப்புகின்றனர் என்று தெரிவித்தார்.

&

Published by
Venu

Recent Posts

Live : ஜம்மு காஷ்மீர் தாக்குதல் முதல்…அரசியல் நிகழ்வுகள் வரை!

Live : ஜம்மு காஷ்மீர் தாக்குதல் முதல்…அரசியல் நிகழ்வுகள் வரை!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…

3 minutes ago

தேனிலவு கொண்டாட வந்த கடற்படை அதிகாரி..சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்…இதயத்தை நொறுக்கும் புகைப்படம்!

ஸ்ரீநகர் :  ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…

25 minutes ago

PahalgamAttack : ஜம்மு காஷ்மீர் தாக்குதல்…மனதை உலுக்கும் காட்சிகள்!

ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…

58 minutes ago

தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…

2 hours ago

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்…அவசரமாக இந்தியா திரும்பிய பிரதமர் மோடி!

ஸ்ரீநகர் :  நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…

2 hours ago

கைவிட்ட அணியை கதறவிட்ட கே.எல்.ராகுல்! ஷாக்கான லக்னோ உரிமையாளர்?

லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…

3 hours ago