second phase ends today [file image]
LokSabha Elections 2024: மக்களவை 2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது.
2ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் (ஏப்ரல் 24) முடிவடைகிறது. கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஏப்ரல் 26ஆம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தல் போட்டியிட கடந்த 3ம் தேதி அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் புயலாய் பரப்புரையில் ஈடுபட்டு வந்தனர். இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இதனால், வேட்பாளார்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
2ஆம் கட்டப் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ராகுல் காந்தியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மகாராஷ்டிர மாநிலம் அமராவதிக்கு வருகை தருகிறார்கள்.
இன்றைய தினம் இறுதி நாள் என்பதால், அந்தந்த கட்சிகளின் நட்சத்திர வேட்பாளர்கள் தங்களது கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இறுதி பேரணிகள் மூலம் தங்கள் வாக்குகளை சேகரிப்பார்கள். தேர்தல் பிரசாரம் ஓய்ந்த பிறகு, பிரச்சாரம் செய்ய வந்த வெளியூர் ஆட்கள் யாரும் தொகுதியில் இருக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில்…
சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று, அதாவது (ஏப்ரல் 1) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. …
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும்…
சென்னை : கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின்…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS)…
மும்பை : ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…