கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவடைந்தது.
கர்நாடகா மாநிலத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை) சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம், உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிடுகின்றனர். கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்று கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில், அனைத்து கட்சியில் இருந்த முக்கிய தலைவர்கள் பலரும் கர்நாடகாவில் இருந்த பல இடங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்து வந்தனர். பிரதமர் மோடி, ஜேபி நட்டா, அமித்ஷா, ஆகியோர் பாஜக சார்பில் தீவீர பிரச்சாரம் செய்தனர்.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளியோர் காங்கிரஸ் சார்பில் தீவிர பிரச்சாரம் செய்தனர். இந்த நிலையில், தற்போது கர்நாடக மாநிலத்தின் 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று 6 மணியுடன் முடிவடைந்தது.
மேலும், அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10- தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 224 தொகுதிகளில் கொண்ட இந்தத் தீர்த்தத்தில் 2,615 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இந்த தேர்தலின் வாக்குப்பதிவு முடிவுகள் வரும் மே 13 ஆம் தேதி வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…