நாடு முழுவதும் நேற்றுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கை மேலும் 19 நாட்களுக்கு நீடித்து மே 3 வரை ஊரடங்கு தொடரும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். பின்னர் ஏப்ரல் 20 ம் தேதி பின்பு நிபந்தனைகளுடன் தளர்வுகள் இருக்கும் என்றும் அதற்கான புதிய கட்டுப்பாடுகள் இன்று வெளியிடப்படும் என தெரிவித்தார்.
அதன்படி, மே 3 ஆம் தேதி வரை கல்வி நிலையங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத்தலங்கள், பயிற்சி மையங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்கனவே இருந்த தடை தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஏப்ரல் 20 ம் தேதி பின்பு நிபந்தனைகளுக்குட்பட்டு, பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சுவேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வோர் ஆகியோருக்கு அனுமதி எனவும், கொரியர் நிறுவனங்கள், ஆன்லைன் வணிக நிறுவனங்கள் அத்தியாவசிய பொருட்களை மட்டும் விநியோகிக்க அனுமதி எனவும், கேபிள் டிவி, DTH சேவைகள் ஆகியவையும் இயங்கலாம் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : தமிழ்நாடு 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசு பட்ஜெட் 2025 - 2026-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்…
சென்னை : சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026…
சென்னை : சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026…
சென்னை : தமிழக அரசின் 2025 - 2026-ன் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் மாநில…