மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 24முதல் ஏப்ரல் 14வரையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. நாளை மறுநாள், இந்த ஊரடங்கு முடியும் நேரத்தில், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, அல்லது தளர்வு ஏற்படுமா என இன்னும் மத்திய , மாநில அரசுகள் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில், நிதித்துறை, பொதுத்துறை போன்ற முக்கிய துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த அமைச்சரவை கூட்டம் மூலம் ஆலோசிக்கப்படும் முக்கிய ஆலோசனைகள் பிரதமர் மோடிக்கு அளிக்கப்படும் எனவும், ஊரடங்கில் கொடுக்கப்பட வேண்டிய முக்கிய தளர்வுகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்தை சரிசெய்ய ஏற்றுமதி, இறக்குமதி போன்ற முக்கிய துறைகளுக்கு தளர்வு அளிக்கப்பட வேண்டும் என பிரதமருக்கு ஆலோசனை வழங்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே, மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…