CAA Act : ஆளும் பாஜக அரசால், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமானது கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 4 வருடங்கள் கழித்து நேற்று நாட்டில் அமல்படுத்தப்படுவதாக அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே, 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட போதே, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. இதனால் உயிரிழப்புகளும் நேரும் நிலை உருவானது. இந்நிலையில், நேற்று மத்திய அரசு மீண்டும் இதனை கையிலெடுத்து இருப்பது எதிர்க்கட்சியினர் மற்றும் அரசியல் சாராத பல்வேறு அமைப்புகள் மத்தியில் எதிர்ப்புகளை உண்டாக்கியுள்ளது.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியினர், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாநில முதல்வர்கள் தங்கள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து உள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை நேற்று முதல் அசாம் மாநிலத்தில் மாணவர் சங்கத்தினர் ஆரம்பித்துள்ளனர். அசாம் மாநிலத்தில், குவஹாத்தி , கம்ரூப், பார்பேட்டா மற்றும் திப்ருகார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மேலும், பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலத்தில் 16 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த இன்று (செவ்வாய்கிழமை) மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த போராட்டங்கள் குறித்து அசாம் காவல்துறை கூறுகையில் , போராட்டங்களின் போது பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டால், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும், சேதாரத்தை சரி செய்ய சம்பந்தப்பட்ட போராட்ட அமைப்புகளிடம் இருந்து அபராத தொகை வசூல் செய்யப்படும் என்றும் அசாம் காவல்துரை அறிவித்துள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…