#Breaking : இடைத்தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Default Image

நாடு முழுவதும் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சமயங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.குறிப்பாக தேர்தல் நடத்தப்படவில்லை.

எனவே நாடு முழுவதும் காலியாக உள்ள தொகுதிகளுக்கு  தேர்தல் எப்போது?  என்று இந்திய தலைமை தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் ஆலோசனை  மேற்கொண்டனர் .ஆலோசனையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மாநில தேர்தல் அதிகாரிகள் காணொளி  காட்சி மூலமாக பங்கேற்றனர். கொரோனா காலத்தில் தேர்தல்களை நடத்தும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் பின்னர் தேர்தல் ஆணைய  செய்தி தொடர்பாளர் ஷெய்பாலி ஷரன் கூறுகையில், நாடு முழுவதும் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் 8 மாநிலங்களில் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.தேர்தல் நடத்தும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் .இடைத்தேர்தல் அட்டவணை உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்