பீகாரில் 5 மாதங்களுக்கு பிறகு, பேருந்து சேவைகளுக்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன்காரணமாக பொதுப்போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 3 -ம் கட்ட தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பல துறைகளுக்கு மாநில அரசு தளர்வுகள் அறிவித்து வருகிறது.
இந்நிலையில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, பீகாரில் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. மேலும் அம்மாநில அரசு, முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றி பயணிக்க வேண்டும் என மக்களுக்கு தெரிவித்துள்ளனர்.
அம்மாநிலத்தில் புதிதாய் 1,444 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,24,827 ஆக உள்ளது. இந்தநிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, பீகாரில் செப்டம்பர் 6- ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…
லக்னோ : இன்று ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் மோதியது.இந்த போட்டியில்…
நடிகர் ஸ்ரீயா இது என அனைவரையும் அதிர்ச்சியாக்க கூடிய அளவுக்கு அவர் இப்போது இருக்கும் தோற்றம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து,…