கர்நாடகாவில் பஸ் தீப்பிடிப்பு.! குழந்தை உட்பட 5 பேர் பலி.!

Default Image

கர்நாடகாவில் பஸ் தீப்பிடித்ததால் நடந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஹரியூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 4-ல் அதிகாலை 3.30 மணியளவில் பஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. அந்த தீ விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 27-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, பஸ் பிஜப்பூரிலிருந்து பெங்களூர் செல்லும் வழியில் இருந்ததாகவும், இறந்தவர்கள் யார் என்பது இன்னும் அடையாளம் தெரியவில்லை. மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்