நடிகை ரேகாவின் வீட்டில் பணியாற்றி வந்த காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ரேகாவின் பங்களாவிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஜெமினி கணேசன் அவர்களின் மகளும், நடிகையுமான ரேகா மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் ‘சீ ஸ்ப்ரிங்ஸ்’ என்ற பங்களாவில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இரண்டு காவலர்கள் பணியாற்றி வந்த நிலையில், ஒருவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டது. அதனையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து நடிகை ரேகாவின் பங்களாவிற்கு நேற்றைய தினம் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து, அவரிடம் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவரது பங்களா இருக்கும் பகுதியை நோய் கட்டுபாட்டு பகுதியாக அறிவித்துள்ளனர். மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்ட காவலர் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள கொரோனா சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…