அரசுக்கு வரும் ஒரு ரூபாயில் வரவு மற்றும் செலவை பிரித்து காட்டிய பட்ஜெட்..!

Published by
Castro Murugan

அரசாங்கத்திற்கு வரும் ஒவ்வொரு ரூ.1-க்கும் 58 பைசா வரியிலிருந்து வரும் பட்ஜெட் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின்படி, அரசுக்கு வரும் ஒரு ரூபாயில் வரவு மற்றும் செலவு  குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  ஒவ்வொரு 1 ரூபாயில் 58 பைசா நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் வரும்.  35 பைசா கடன் மற்றும் பிற கடன்கள் மூலம் வரும். அதேசமயம், 5 பைசா வரி அல்லாத வருவாயிலிருந்து வரும். முதலீட்டு விலக்கு மற்றும்  கடன் அல்லாத மூலதனங்கள் மூலம் 2 பைசா வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், செலவைப் பற்றி பேசினால், ஒரு ரூபாய்க்கு மத்திய அரசின் கடனுக்கான வட்டிக்காக 20 பைசா செலுத்தும். இதற்குப் பிறகு மாநிலங்களின் வரி பங்கீடு 17 பைசா . பாதுகாப்பு துறைக்கு 8 பைசா ஒதுக்கீடு உள்ளது.

மத்திய அரசின் திட்டங்களுக்கு 15 பைசாவும், மத்திய, மாநில அரசின் திட்டங்களுக்கு 9 பைசாவும் செலவிடப்படும். அதே நேரத்தில், நிதி குழு சார்ந்த பங்கீடு 10 பைசா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  மானியமாக  8 பைசாவும், ஓய்வூதியமாக 4 பைசாவும் செலவாகும். மற்ற செலவுகளுக்கு 9 பைசா செலவழிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Castro Murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago