மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தேர்தல் நெருங்கும் வேளை என்பதால், நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், குறுகிய கால பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.! நிர்மலா சீதாராமன்.!
குறுகிய கால பட்ஜெட் என்பதால் பெரிய அளவிலான அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்று அறிகுறி அளித்து தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையை தொடங்கினார். கடந்த 10 ஆண்டுகளில் 500 பில்லியன் அளவுக்கு அந்நிய செலவாணி நமது நாட்டில் அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.
நமது நாட்டின் உட்கட்டமைப்பு செலவு 11.11 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் செலவீனம் ஆண்டுக்கு 40.90 லட்சமாக உள்ளது. கடந்த ஆண்டுகளில் வருமானவரி செலுத்துவோரின் எண்ணிக்கையானது 2.4 மடங்கு அதிகரித்துள்ளது. வருமான வரி ரிட்டர்ன்ஸ் 10 நாட்களில் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது.
வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. முந்தைய வரிவிகித நிலைமையே தற்போதும் தொடர்கிறது. கார்ப்பரேட் வரி 22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வரும் 2025-2026ஆம் ஆண்டுக்கான நிதிப்பற்றாக்குறை 4.5 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தனர்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…