பி.எஸ்-4 ரக விமானங்களை விற்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு! – உச்சநீதிமன்றம் அதிரடி!

Published by
மணிகண்டன்

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் வரை இந்த ஊரடங்கு நீட்டிக்க உள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் தவிர மற்றவை திறக்க அனுமதியில்லை. மக்களும் அத்தியாவசியம் தவிர மற்ற எதற்கும் வெளியில் வர அனுமதி இல்லை. 

இந்நிலையில், சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாக கூறி ஏற்கனவே பி.எஸ்-4 ரக வாகனங்களை வரும் ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து விற்க கூடாது என உச்சநீதிமன்றம் 2018ஆம் ஆண்டே உத்தரவிட்டிருந்தது.

ஆனால், தற்போது கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருப்பதால், தற்போது, பி.எஸ்.4 ரக வாகனங்களை விற்பனை செய்யமுடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் லட்சக்கணக்கான இருசக்கர வாகனங்கள், 15 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், 10 ஆயிரத்திற்கும் அதிகமான வணிக வாகனங்கள் என விற்கமுடியாமல் தேங்கி இருக்கிறது. இதனால், 6,300 கோடி தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதனை குறித்து வியாபாரிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி அமர்வு, ஊரடங்கு காலம் முடிந்த பிறகு 10 நாட்கள் பிஎஸ்-4 ரக விமானங்களை விற்பதற்கு கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. மேலும், பி.எஸ்-4 ரக வாகனங்களை டெல்லி போன்ற பெரு நகரங்களில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Published by
மணிகண்டன்

Recent Posts

INDvsPAK: கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த பாக்., வீரர்கள்.! பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா…

INDvsPAK: கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த பாக்., வீரர்கள்.! பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா…

துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…

6 hours ago

மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!

ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…

7 hours ago

NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…

துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…

8 hours ago

வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!

சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…

8 hours ago

INDvsPAK: நீயா? நானா? வெற்றி வாகை யாருக்கு! டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்.!!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…

11 hours ago

IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!

உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…

11 hours ago