பாலூட்டும் தாய்மார்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் – மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி!

Published by
Rebekal

பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், மக்கள் கொரோனாவிலிருந்து தங்களைப் பாதுகாக்க தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இந்தியாவில் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தடுப்பூசி போடுவதற்கு மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பு செலுத்துவதற்கு அனுமதி கிடையாது என ஏற்கனவே கூறப்பட்டு வந்தது போல கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா ஆகிய நாடுகளில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவிலும் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்தது. இது தொடர்பாக தேசிய நிபுணர் குழு தடுப்பூசி தொடர்பாக மத்திய அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை வழங்கி வந்துள்ளது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் தற்பொழுது பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் அதேசமயம் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி எடுத்துக் கள்ள அனுமதி வழங்கப்படவில்லை. இது குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்கு முன்னதாக தாய்மார்கள் ரேபிட் டெஸ்ட் பரிசோதனை மூலம் தடுப்பூசி பெற்றால் அவர்களை ஸ்கிரீனிங் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

10 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

15 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

15 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

15 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

15 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

15 hours ago