நேற்று உலகம் முழுவதும் உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவரான நீடா அம்பானி அவர்கள் மார்பகப் புற்றுநோய் பிரச்சினைகளுக்கான ஒன் ஸ்டாப் ப்ரீஸ்ட் கிளினிக்கை நிறுவியுள்ளார்.
உலகம் முழுவதிலும் பிப்ரவரி 4-ஆம் தேதி புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படும் நிலையில் பலரும் அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் கருத்துக்களை தெரிவிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் நீடா அம்பானி அவர்கள் மார்பகம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிக்க கூடிய ஒன் ஸ்டாப் ப்ரீஸ்ட் கிளினிக் எனும் சிகிச்சை மையத்தினை நிறுவியுள்ளார். தற்போதைய காலத்தில் அதிக அளவில் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருவதால் அசௌகரியமான மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை கண்டறிந்த இரண்டு மணி நேரத்துக்கு உள்ளேயே அறுவை சிகிச்சை அல்லது சிகிச்சை செய்வதற்கான ஒரு மையமாக இந்த மையம் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசியுள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் நீடா அம்பானி, ஒவ்வொரு இந்தியருக்கும் மலிவான விலையில் உலகத் தரமான மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் எனும் தொலைநோக்கு பார்வையுடன் தான் இதை தொடங்கியுள்ளதாகவும் ஒரு இந்திய குடிமகளாகவும், பெண்ணாகவும் மார்பக பிரச்சினைகளுக்கான இந்த ஒன் ஸ்டாப் ப்ரீஸ்ட் கிளினிக்கை தொடங்கி வைப்பதில் பெருமை அடைவதாகவும் கூறியுள்ளார்.
வாஷிங்டன் : OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன், ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுடன் பயனர்கள் தொடர்பு…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.…
கோவை : கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி…
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…