#BREAKING: மீண்டும் ஆட்சியை பிடிக்கும் திரிணாமூல் காங்கிரஸ்? நந்திகிராம் தொகுதியில் மம்தா முன்னிலை!!

Default Image

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 202 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை.

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு மட்டும் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி, பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி, வாக்கு எண்ணிக்கையில் சில சுற்றுகள் முடிந்த நிலையில், மம்தா பானர்ஜி தலைமையில் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் 202 இடங்களிலும், பாஜக 88 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலை அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர்ந்தால் மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியமைக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேற்கு வங்கத்தில் பாஜகவை நுழைய விடமாட்டேன் என மம்தா பானர்ஜி சவால் விட்டிருந்தார்.

இதனிடையே, மேற்குவங்க நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து களமிறங்கிய பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்தில் முன்னிலை பெற்று வந்தார்.

இந்த நிலையில், காலையிலிருந்து பின்னணியில் இருந்த மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் முன்னணிக்கு வந்துள்ளார். ஒரு மணி நேரத்திற்கு முன்பு 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்த பாஜக கட்சியின் வேட்பாளர் சுவேந்து அதிகாரி பின்னடைவை சந்தித்துள்ளார்.

தற்போது, நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை விட 1,417 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை பெற்று வருகிறார். இந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் வென்றால், அக்கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk