கேரளா மற்றும் தமிழகத்திற்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு விளக்கம்.
முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளா மாநிலத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்டனி அவர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் சார்பில் கூறுகையில், கேரளாவின் இடுக்கி பகுதியில் இருக்கக்கூடிய முல்லைப்பெரியாறு அணைக்கு பதிலாக, புதிதாக அணை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளதாகவும், இது தொடர்பாக கடந்த 2018-ஆம் ஆண்டு நவ.14 ஆம் தேதி, புதிய வழிமுறைகளை தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும், ஆனால் இதில் முக்கியமான வழிமுறை என்னவென்றால், சுற்றுசூழல் அனுமதி வழங்கப்பட, கேரளா மற்றும் தமிழகத்திற்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே புதிய அணை கட்ட அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக அரசு இதனை எதற்காக எதிர்க்கிறார்கள் எனக் கேட்டதற்கு அணையை ஆய்வு செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட குழு, இந்த அணை பாதுகாப்பாக, வலுவாக இருக்கிறது என கூறியுள்ளதால் தான் புதிய வேண்டாமா என கூறுகிறார்கள் என்றும், இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், உச்சநீதிமன்ற உத்தரவின்படி தான் அரசுகள் செயல்பட முடியும் என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
சென்னை : அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா (வி.கே.சசிகலா) நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில்…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…