புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி, 5 அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு.
அதன்படி, சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி நிர்வாகம், பொது நிர்வாகம் மற்றும் அறநிலைத்துறை முதல்வர் ரங்கசாமிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது. துறைமுகம், வக்ஃப் வாரியம், கூட்டுறவு உள்ளிட்ட துறைகளை முதல்வர் கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் நமச்சிவாயத்திற்கு உள்துறை, மின்சாரம், தொழில் மற்றும் வர்த்தகத்துறை, கல்வித்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் உள்ளிட்ட துறைகளும் நமச்சிவாயத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது. லட்சுமி நாராயணனுக்கு பொதுப்பணித்துறை, சுற்றுலா, மீன்வளத்துறை, சட்டம், தகவல் தொழில்நுட்பம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேனி ஜெயகுமாருக்கு வேளாண், கால்நடை பராமரிப்பு, வனம், சமூக நலன் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைங்கள் நலத்துறையை தேனி ஜெயகுமார் கவனிப்பார் என்றும் தெரிவித்துள்ளனர்.
சந்திரப்ரியங்காவுக்கு போக்குவரத்துக்கு, ஆதிதிராவிடர் நலன், வீட்டுவசதித்துறை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, கலை, கலாச்சாரம், பொருளாதாரம், புள்ளியில் துறையையும் கவனிப்பார். பாஜகவின் சாய் சரவணகுமாருக்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…