#Breaking:பட்டாசு தயாரிப்பில் விதிமீறல் – உச்சநீதிமன்றம்..!

Published by
Edison

பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் விதிகளைமீறி பட்டாசு தயாரித்து இறுப்பதாக சிபிஐ முதற்கட்ட அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்கள் ,தடை செய்யப்பட்ட பட்டாசுகளை ஏன் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற கேள்வியை நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்வைத்தார்கள்.இந்த நிலையில்,இது தொடர்பான வழக்கு மீண்டும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் விதிகளை மீறி பட்டாசு தயாரித்து இருப்பதாக சிபிஐ முதற்கட்ட அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும்,தடை செய்யப்பட்ட பேரியம்,நைட்ரேட், உள்ளிட்ட வேதிப்பொருட்கள் கொண்டு பட்டாசு தயாரிக்கப்பட்டதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.எனவே,விதிமீறல் தொடர்பாக சிபிஐ ஆணையர் விசாரணை நடத்த வேண்டும் என்றும்,விதிமுறைகள் மீறி பட்டாசு தயாரிப்பு குறித்து 6 வாரத்தில் முழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும்,கொண்டாட்டங்கள் முக்கியம்தான்,அதை பார்க்க நீதிபதிகளும் காத்திருக்கின்றனர்.ஆனால்,தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை வெடிப்பதால் ஆஸ்துமா நோயாளிகள்,குழந்தைகள் பெரியவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே,மற்றவர்களை துன்புறுத்தும் விதமாக கொண்டாட்டம் கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில்,சிபிஐ என்ன கண்டுபிடித்தார்கள் என்று எங்களுக்கு தெரியாது என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு பதில் அளித்த சிபிஐ,தங்களது விசாரணை குறித்து அறிக்கைகளை மனுதாரர்களுக்கும்,எதிர்மனுதாரர்களுக்கும் வழங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளது.இதனையடுத்து,இந்த வழக்கின் விசாரணை அக்.6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Recent Posts

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…

8 hours ago

“சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…

8 hours ago

ஹாக்கி ஆசிய கோப்பை : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!

ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…

8 hours ago

ஓடிடியில் திகில் காட்ட வருகிறது ‘டிமாண்டி காலனி 2’! ரிலீஸ் தேதி இதோ!

சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…

8 hours ago

செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன் குளத்தி அம்மன் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு  முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…

8 hours ago

ஷூட்டிங் போன இடங்களில் பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் மீது வழக்கு!

சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…

8 hours ago