உத்தராகண்ட் கவர்னர் பேபி ராணி மவுரியா தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் சமர்ப்பித்தார்.
உத்தராகண்ட் மாநில ஆளுநர் பேபி ராணி மவுரியா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பியுள்ளதாக கவர்னரின் செயலாளர் பி.கே.சாந்த் தெரிவித்ததாக கூறப்படுகிறது. உத்தராகண்ட் ஆளுநராக மூன்று ஆண்டுகள் நிறைவு செய்த மவுரியா, ஆக்ரா மேயராக இருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி உத்தராகண்டின் 7வது ஆளுநராக பேபி ராணி மவுரியா நியமிக்கப்பட்டார். ஆகஸ்ட் 26-ஆம் தேதி உத்தராகண்டில் உள்ள ராஜ் பவனில் நடந்த விழாவில் அவர் பதவியேற்றார். 2009ல் முதல்வராக இருந்த மார்கரெட் ஆல்வாவுக்குப் பிறகு, உத்தராகண்டின் ஆளுநராக பணியாற்றிய இரண்டாவது பெண்மணி பேபி ராணி மவுரியா ஆனார்.
இதனிடையே, சமீபத்தில் பேபி ராணி மவுரியா டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில், தற்போது தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். பேபி ராணி மவுரியா உபி அரசியலில் தீவிரம் காட்டுவதாகவும், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் மவுரியா போட்டியிடலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…