உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு, உள்துறை, வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பிரதமருடனான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரத்தி இந்தியாவின் நிலைப்பாடு, உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, ஐநா சபையில் உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து ரஷ்யாவை வலியுத்துமாறு கோரிக்கை வந்த வந்த வண்ணம் உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலை தடுத்து நிறுத்தவும், இந்தியா வலுவாக குரல் கொடுக்கவும் உக்ரைன் தூதர் தெரிவித்தார். பிரதமர் மோடி உலகளவில் மதிப்புமிக்க தலைவர் என்பதால் அவரது பேச்சை புதின் கேட்பார் என நம்புகிறேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
ரஷ்யாவுக்கு சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக இருக்கும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நேட்டோ கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் ஆதரவளித்துள்ளது. ஆனால், உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில், அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…
சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…
ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…
டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…