மம்தாவின் திரிணாமுல் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்பி சாந்தனு சென் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது, நேற்று மாநிலங்களவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி,, உளவு பார்க்கும் விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து வந்தார். அப்போது, அந்த அறிக்கையின் நகலை அமைச்சரின் கையில் இருந்து பிடுங்கி, அதனை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி சாந்தனு சென் கிழித்தாக கூறப்படுகிறது.
அமைச்சரின் கையில் இருந்து பிடுங்கி கிழித்த நகலை அவையின் துணை தலைவர் இருக்கையை நோக்கி எறிந்துள்ளார். இது அவையை அவமதிக்கும் செயலாகும் என்றும் துணை தலைவருக்கு அவமானம் மற்றும் அமைச்சரிடம் இருந்து ஆவணத்தை பிடுங்கியது அத்துமீறிய செயல் எனவும் நேற்று பாஜகவினர் புகார் அளித்திருந்தனர்.
திரிணாமுல் கட்சி மாநிலங்களவை உறுப்பினர்கள் மத்திய அமைச்சரான ஹர்திக் சிங் பூரி தங்களை மிரட்டும் விதமாக நடந்துகொண்டதாக பதில் புகார் அளித்தனர். இந்த நிலையில், இன்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அமைச்சரிடமிருந்து அறிக்கையை பறித்து கிழித்து எறிந்த விவகாரம் தொடர்பாக எம்பி சாந்தனு சென் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நாடாளுமன்ற நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் மாநிலங்களவை நடவடிக்கையில் எம்பி சாந்தனு சென் பங்கேற்கக்கூடாது என்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார். இதனிடையே, எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. உளவு பார்ப்பது விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் 4வது நாளாக நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளன என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…