இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா வைரசால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 141 இந்தியர்கள், 25 வெளிநாட்டினர்கள் என மொத்தம் இதுவரை 169 ஆக உயர்ந்துள்ளது.
ரயில் முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்தால் அதற்கான அபராத தொகை வசூலிக்கப்படாது என ரயில்வே துறை அறிவித்துள்ளது. கொரோனாவால் ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் 100 சதவீத பணமும் திருப்பித் தரப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
கொரோனாவால் பலரும் டிக்கெட்டை ரத்து செய்து வரும் நிலையில் மத்திய ரயில்வே அமைச்சகம் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது. ரயிலின் முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்தால் முன்புரூ.60 முதல் வசூலிக்கப்படுவது வழக்கம். இதற்கு முன் விமான டிக்கெட் ரத்து செய்தால் முழு பணத்தையும் திருப்பி அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா காரணமாக ரயில் பயணத்தை பொதுமக்கள் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றன. மார்ச் மாதத்தில் நேற்றுவரை 60% ரயில் டிக்கெட்டை பயணிகள் ரத்து செய்துள்ளதாக நேற்று நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ரயில்வே அதிகாரிகள் கூறினார்கள். இதனால் நாடு முழுவதும் நாளை முதல் மார்ச் 31-ம் தேி வரை 168 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…
டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…