#Breaking:நாட்டின் பாதுகாப்பு சூழல் – பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

Default Image

உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில்,இது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,தற்போதைய உலகளாவிய சூழலில் இந்தியாவின் பாதுகாப்பு தயார் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில்,மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.மேலும்,தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் பங்கேற்றுள்ளார்.

மேலும்,கடந்த மார்ச் 9 ஆம் தேதி இந்திய ஏவுகணை ஒன்று பாகிஸ்தான் நாட்டிற்குள் தவறுதலாக பாய்ந்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாகவும் தற்போது பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்