புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வரம் 26ம் தேதி முதல் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு தற்காலிகமாக இயங்காது என அறிவிப்பு.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் கொரோனா தொற்றுக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும், அதிதீவிர சிகிச்சையும், உயர் அழுத்த பிராணவாயு தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து உள்ளதால் அதிக எண்ணிக்கையிலான மருத்துவ பணியாளர்கள் அந்த நோயாளிகளை கவனிக்க தேவைப்படுகிறாரகள் என கூறியுள்ளனர்.
எனவே, கொரோனா நோயாளிகளை பாதுகாக்கவும் வெளிப்புற நோயாளி பிரிவிற்கு வரும் கொரோனா இல்லாத நபர்களை பாதுகாக்கவும், தொற்று பரவலை தடுக்கவும் வரும் 26ஆம் தேதி முதல் ஜிப்மர் மருத்துவமனையில் அனைத்துவித நேரடி வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு (O.P) தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது என அறிவித்துள்ளனர். மேலும், அனைத்து அவசர மருத்துவ மற்றும் அறுவைசிகிச்சை சேவைகள் வழக்கம்போல் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டீஸர் நாளை இரவு…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருந்து…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு காவல்துறை இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (27ம் தேதி) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில்…