மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமதுநகர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.ஐசியூ பிரிவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து,தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நோயாளிகளை மீட்டுள்ளனர்.ஐசியூவில் குறைந்தது 20-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்ததாகவும்,இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில்,மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமதுநகர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 10 பேர் உயிரிழ்ந்ததாக அப்பகுதி மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர போசலே தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து,மகாராஷ்டிர சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ், இந்தச் செய்தி குறித்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலையும் தெரிவித்து,ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“நகரில் இருந்து மிகவும் அதிர்ச்சியூட்டும் மற்றும் குழப்பமான செய்தி.நகர் சிவில் மருத்துவமனை ஐசியூ தீ விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.தீவிர விசாரணை நடத்தப்பட்டு, பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”,என்று பதிவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…