மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமதுநகர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.ஐசியூ பிரிவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து,தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நோயாளிகளை மீட்டுள்ளனர்.ஐசியூவில் குறைந்தது 20-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்ததாகவும்,இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில்,மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமதுநகர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 10 பேர் உயிரிழ்ந்ததாக அப்பகுதி மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர போசலே தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து,மகாராஷ்டிர சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ், இந்தச் செய்தி குறித்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலையும் தெரிவித்து,ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“நகரில் இருந்து மிகவும் அதிர்ச்சியூட்டும் மற்றும் குழப்பமான செய்தி.நகர் சிவில் மருத்துவமனை ஐசியூ தீ விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.தீவிர விசாரணை நடத்தப்பட்டு, பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”,என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…