சிறையில் சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மனித உரிமை ஆணையத்தில் புகார்.
கர்நாடக மாநிலம் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு நேற்று காய்ச்ச்ல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பெங்களூர் சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை வளாகத்தில், சசிகலாவை காண அவரது உறவினர்கள் கூடியுள்ளனர்.
சசிகலாவின் உடல்நிலை குறைத்த தற்போதைய நிலையை தெளிவுபடுத்துமாறு உறவினர்கள் வலியறுத்தியுள்ளனர். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில், சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக, கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் புகாரளித்துள்ளார்.
மேலும், சசிகலா விடுதலையாக சில நாட்களே உள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார். சசிகலாவிற்கு சிறையில் ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவு குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் ராஜராஜன் புகாரளித்துள்ளார். இதனிடையே, வரும் 27-ம் தேதி சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…