#Breaking : டெல்லியிலுள்ள லஜ்பத் நகர் துணிக்கடையில் திடீர் தீ விபத்து!

Published by
Rebekal
  • டெல்லியில் உள்ள லஜ்பத் நகர் துணிக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
  • 30 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளின் காரணமாக கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. இதனையடுத்து டெல்லியில் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க முறையில் கடைகள் அனைத்தும் திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள லஜ்பத் நகர் சென்ட்ரல் மார்க்கெட்டில் உள்ள துணிக்கடை ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ மளமளவென அருகில் இருந்த கடைகளுக்கும் பரவ தொடங்கியதால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்துள்ளது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திறகு 16 வாகனங்களில் தீயணைப்பு துறை வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றுள்ளது. இருப்பினும் தீ கட்டுக்குள் வராததால் 30 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

துணிக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு அருகிலிருந்த கடைகளுக்கும் பரவியதால் வெளியில் நடமாட கூடியவர்களுக்கு இந்த தீ விபத்து புகையின் காரணமாக மூச்சு பிரச்சனைகளும் ஏற்பட கூடிய நிலையும் உருவாகி உள்ளது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தீ விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனவும், கடையிலிருந்த துணிகள் அனைத்தும் தீயில் கருகி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

12 hours ago
பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

13 hours ago
வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

14 hours ago
தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago
ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago
போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

17 hours ago