பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.
உக்ரைனில் 6-வது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் நெருக்கடி குறித்து 4-வது முறையாக மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். ஏற்கனவே 3 முறை உயர்மட்ட ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், மீண்டும் பிரதமர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்திய மாணவர் நவீன் கொல்லப்பட்டதற்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.
உக்ரைனில் குண்டு வீச்சில் இந்திய மாணவர் உயிரிழந்த நிலையில் மற்றவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து ஆலோசனையில் பிரதமர் ஈடுபட்டுள்ளார். கடந்த 48 மணி நேரத்தில் பிரதமர் மோடி 4-வது முறையாக உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
இதற்கிடையில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீனின் தந்தையுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…