#BREAKING: சோனியா காந்தி – பிரசாந்த் கிஷோர் 4வது முறையாக ஆலோசனை!

Published by
பாலா கலியமூர்த்தி

சோனியா காந்தியிடம், பிரசாந்த் கிஷோர் வகுத்து தந்துள்ள ஆய்வறிக்கை குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் 4-ஆவது முறையாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கேசி வேணுகோபால், ஆனந்த் சர்மா, அம்பிகா சோனி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பிரசாந்த் கிஷோர் வகுத்து தந்துள்ள ஆய்வறிக்கை குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இதில் குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 5 மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஒரு மாநிலத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. அதிலும், ஆட்சியில் இருந்த பஞ்சாப் மாநிலத்தில் கூட காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. ஏற்கனவே, காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த தேர்தல் தோல்வி மேலும் கேள்வியை எழுப்பியது.

2024 பொதுத் தேர்தலை முன்னிட்டு, சில நாட்களாகவே அதாவது இதுவரை 3 முறை பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், தேர்தலுக்கான ஆய்வறிக்கை குறித்து பேசப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இன்று 4ஆவது முறையாக பிரசாந்த் கிஷோர், சோனியா காந்தியை சந்தித்து பேசி வருகிறார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

11 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

12 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

13 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

13 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

13 hours ago