#Breaking:சேகர் ரெட்டி வழக்கு – உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

Published by
Edison

கடந்த 2016-ஆம் ஆண்டு நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த சூழலில்,தொழிலதிபர் சேகர் ரெட்டி பழைய பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக,வங்கி அதிகாரிகளின் உதவியுடன் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கியதாக புகார் எழுந்தது.இதையடுத்து, சென்னையில் இருக்கும் சேகர் ரெட்டி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.அப்போது,பெட்டி பெட்டியாக ரூ.34 கோடிக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகளும்,ரூ.147 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 நோட்டுகளும்,178 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, சேகர் ரெட்டி மற்றும் பிரேம்குமார், ஸ்ரீனிவாசுலு, ரத்தினம், ராமச்சந்திரன், பரம்சல் லோதா ஆகிய 6 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.ஆனால்,இந்த வழக்கில் சேகர் ரெட்டிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து,சேகர் ரெட்டியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனால்,அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க கோரி சேகர் ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்திருந்தார்.

இந்நிலையில்,இந்த வழக்கு இன்று விசாராணைக்கு வந்த நிலையில், சேகர் ரெட்டிக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை விதித்தும்,மேலும்,சேகர் ரெட்டிக்கு எதிரான அமலாக்க துறையின் வழக்கை ரத்து செய்தும்  உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனிடையே,பணம் பதுக்கியதற்கான ஆதாரம் உள்ளதாகவும்,சேகர் ரெட்டியிடம் தொடர் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறி அமலாக்க துறை வாதிட்ட நிலையில்,உச்சநீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது.

Recent Posts

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…

2 hours ago

மல்லை சத்யாவுடன் சமரசம்! ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …

3 hours ago

பந்துவீச்சில் மாஸ் காட்டிய பெங்களூர்! திணறிய பஞ்சாப்..டார்கெட் இது தான்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

3 hours ago

வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள்! மல்லை சத்யா பேச்சு!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…

4 hours ago

டிஜிட்டல் கற்பழிப்பு! ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்?

ஹரியானா : மாநிலம் குருகிராமில்  கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…

5 hours ago

பஞ்சாப்க்கு பதிலடி கொடுக்குமா பெங்களூர்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

5 hours ago