#BREAKING: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் – பிரதமர் மோடி ..!

Default Image

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு PM Cares மூலம் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

கொரோனாவால் தந்தை மற்றும் தாய் ஆகியோரை இழந்த குழந்தைகளுக்கு PM Cares மூலம்  ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயதை அடைந்ததும் மாத ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மேலும் 23 வயதை அடைந்ததும் PM Caresல் இருத்து ரூ.10 லட்சம் அளிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் வைப்பு நிதி வழங்கப்படும் எனவும் அந்த குழந்தை 18 வயதில் நிறைவடையும் போது அந்த தொகை வட்டியுடன் அந்த குழந்தைக்கு வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்