ஹிமாச்சல பிரதேசத்தில் 11 சுற்றுலா பயணிகளுடன் சென்ற ரோப் கார் அந்தரத்தில் சிக்கிய நிலையில், மீட்பு பணி தீவிரம்.
ஹிமாச்சல பிரதேசம் சோலன் மாவட்டத்தில் பர்வானூ டிம்பர் டிரெயிலில் 11 சுற்றுலா பயணிகளுடன் சென்ற ரோப் கார் பழுதாகி அந்தரத்தில் சிக்கிய நிலையில், மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்தரத்தில் தொங்கும் ரோப் காரில் இருந்து 2 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 9 பேர் இன்னும் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் NDRF குழு ( தேசிய பேரிடர் குழு) ஈடுபட்டு வருகிறது.
தனியாருக்கு சொந்தமான ரிசார்ட் ஒன்றில் உள்ள ரோப் காரில் சுற்றுலா பயணிகள் சென்றபோது விபத்துக்குள்ளானது. ரோப் கார் பழுதாகி அந்தரத்தில் தொங்கும் இடத்துக்கு தேசிய பெரிதா குழு விரைந்து, துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த ஏப்ரலில் ஜார்கண்டில் நடந்த ரோப் கார் விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…