உத்தராகண்ட் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் புஷ்கர் சிங் தாமி தோல்வி அடைந்த நிலையிலும், மீண்டும் முதல்வராக தேர்வு.
நடந்து முடிந்த உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் பாஜக 47 இடங்களை பிடித்து பாஜக அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத்தக்க வைத்தது. ஆனால், அந்த மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி காதிமா தொகுதியில் தோல்வி அடைந்ததால் புதிய முதல்வர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், உத்தராகண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். டேராடூனில் நடந்த பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக புஷ்கர் சிங் தாமி ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இன்னும் சில நாட்களில் அவர் போட்டியிடுவதற்கான சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனால் பாஜக எம்எல்ஏ ஒருவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து, முதல்வர் போட்டியிடுவதற்கான வழிவகை செய்யப்படும் என பாஜக தரப்பில் தெரிவித்துள்ளனர். புஷ்கர் சிங் தாமியின் திறமையான நிர்வாகம் காரணமாக மீண்டும் முதல்வராக தேர்தெடுக்கப்பட்டார் என கூறப்படுகிறது.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…