புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகள் மூடல் – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!

The Puducherry government has announced that all government and private schools will be closed from tomorrow.

அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று புதுச்சேரி அரசு அறிவிப்பு.

புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை முதல் (10-01-2022) மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டாலும், 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.