#Breaking : நிலக்கரி துறையில் தனியாருக்கு அனுமதி – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Published by
Venu

 நிலக்கரி துறையில் தனியாருக்கு அனுமதி அளிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலே முடங்கி உள்ளனர். தற்போது 3- ஆம் கட்ட ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் உள்ளது.இதனிடையே பிரதமர் மோடி நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார்.இது முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.மேலும் ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டம் ஒன்றை அறிவித்தார். அதன்படி , நிர்மலா சீதாராமன் கடந்த புதன்கிழமை முதல் தொடர்ந்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.  

அந்த வகையில் நேற்று விவசாயிகள், கால்நடை வளர்ப்பு, மீன்வளம், பால்வளம் உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்படவுள்ள நலத்திட்டங்கள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்.இந்நிலையில் இன்றும் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.அப்பொழுது அவர் பேசுகையில்,பிரதமர் கூறிய ”சுயசார்பு இந்தியா” சவாலுக்கு நாம் தயாராக வேண்டும். சுயசார்பு இந்தியா என்பது இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற கொள்கையை தீர்க்கமாக கொண்டது.

இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சி பெற கொள்கைகளில் சீர்திருத்தம் அவசியம். தன்னிறைவான பொருளாதாரத்தை உருவாக்கவே பிரதமர் முழுமையான சீர்திருத்தத்தை மேற்கொண்டு வருகிறார். இதில் குறிப்பாக நேரடி மானியத் திட்டம், ஜிஎஸ்டி போன்றவைகளை குறிப்பிடலாம்.முக்கியமான 8 துறைகளுக்கு இன்று அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.  கனிமங்கள், நிலக்கரி, ராணுவ தளவாட உற்பத்தி, யூனியன் பிரதேச மின் வினியோக கட்டமைப்பு, விமானப் போக்குவரத்து, விண்வெளி, அணுசக்தி, போக்குவரத்து வசதிகள் ஆகிய துறைகளில் இன்று அறிவிப்பு வெளியாக உள்ளது என்று தெரிவித்தார். மேலும்  வணிக ரீதியாக நிலக்கரி எடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே உற்பத்தி இலக்கை எட்டும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். .முதல் கட்டமாக 50 சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.நிலக்கரித்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.நிலக்கரியை சுரங்கத்திலிருந்து எடுத்துச் செல்லும் போக்குவரத்தை மேம்படுத்த 18,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

500 கனிமச் சுரங்கங்கள் வெளிப்படையான முறையில் ஏலம் விடப்படும் .அலுமினியம் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பாக்சைட் & நிலக்கரிச் சுரங்கங்கள் ஒன்றாக ஏலம் விடப்படும். கனிம வளங்களை கண்டறிய தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும் .

சுரங்கத் துறையை மேம்படுத்த அதிநவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும். கனிமச் சுரங்கங்களின் குத்தகையை பிற நிறுவனங்களுக்கு மாற்றிக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்படும் . நிலக்கரி இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை பெருக்கி தன்னிறைவு பெறுவதே நமது இலக்கு என்று தெரிவித்தார். 

Published by
Venu

Recent Posts

ரூ.66,000-ஐ கடந்த தங்கம் விலை… ஒரே நாளில் 2வது முறையாக மாற்றம்!

ரூ.66,000-ஐ கடந்த தங்கம் விலை… ஒரே நாளில் 2வது முறையாக மாற்றம்!

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…

30 minutes ago

“மக்களை மறந்த திமுக அரசின் பட்ஜெட்”- தவெக தலைவர் விஜய் அறிக்கை!

சென்னை :  இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…

30 minutes ago

காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…

50 minutes ago

வெறும் காகிதம் மாதிரி இருக்கு! பட்ஜெட் அறிவிப்பு…அண்ணாமலை விமர்சனம்!

சென்னை :  இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…

1 hour ago

பும்ராவும் இல்லை…ஹர்திக்குக்கும் இல்லை! மும்பை இந்தியன்ஸ்க்கு விழுந்த பெரிய அடி!

சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…

3 hours ago

தமிழக பட்ஜெட் 2025 : மகளிர், மாணவர்கள், வேலைவாய்ப்பு.., மொத்த விவரம் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…

4 hours ago