தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் விளக்கமளித்துள்ளார்.
சமீபத்தில்,தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து கொங்குநாடு உருவாக்கப்படும் என்ற சர்ச்சை கிளம்பி அரசியல் கட்சிகள் மத்தியில் பல எதிர்ப்புகள் உருவாயின.
இந்நிலையில்,தமிழ்நாட்டை பிரிக்கும் ஏதேனும் திட்டம் இருக்கிறதா?,இதன் உண்மைத்தன்மை என்ன? என்று மக்களவை எம்பிக்கள் பாரிவேந்தர், ராமலிங்கம் ஆகியோர் எழுத்து பூர்வமாக முன்வைத்த கேள்வி எழுப்பினர்.
இதற்கு,பதிலளித்துள்ள மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய்,தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் தற்போது பரிசீலனையில் இல்லை.மேலும்,கொங்குநாடு என்ற புதிய மாநிலத்தை உருவாக்குவது தொடர்பான எந்த திட்டமும் இல்லை என்று தெளிவாக விளக்கமளித்துள்ளார்.
மத்திய அரசு இவ்வாறு விளக்கம் அளித்துள்ளதால்,தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…