எஸ்.பி.ஐ வங்கியின் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச வைப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என எஸ்.பி.ஐ தலைவர் ரஜ்னீஷ் குமார் அதிரடியாக அறிவித்துள்ளார். 44.51 கோடி வாடிக்கையாளர்கள் இந்த அறிவிப்பின் மூலம் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது. மாநகரம், நகரம் மற்றும் கிராமப்புறத்தில் இருப்பவர்கள் அனைவரும் தங்களது வங்கி கணக்கில் ரூ.3,000, ரூ.2,000, ரூ.1000 என குறைந்தபட்ச வைப்புத் தொகையை வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்த நிலையில், அப்படி இல்லையென்றால் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து ரூ.5 முதல் ரூ.15 வரை அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது குறைந்தபட்ச வைப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளது. இதற்குமுன் குறைந்தபட்ச வைப்புத்தொகை இல்லை எனக் கூறி, அடிக்கடி பணம் எடுக்கப்பட்டு வந்ததால் வாடிக்கையாளர்கள் பலர் எஸ்.பி.ஐ வங்கி கணக்கை பயன்படுத்துவதை நிறுத்தினர். இதன் விளைவு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என வங்கி தலைமை அறிவித்துள்ளது. இதையடுத்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சந்திர சேகர் கவுட் என்பவர் கேட்ட கேள்விக்கு, 2019ம் ஆண்டு மட்டும் குறைந்தபட்சம் வைப்புத்தொகை இல்லை என கூறி, 388 கோடி வங்கி கணக்குகளில் இருந்து ரூ.235 கோடி வரை எஸ்.பி.ஐ அபராதம் வசூலித்துள்ளது என மும்பையில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கி தகவல் அளித்துள்ளது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…