BREAKING NEWS: ஹைதராபாத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த காங்கிரஸ், ம.ஜ.த கட்சி எம்.எல்.ஏக்கள் 2 பேருந்துகளில் பெங்களூரு வருகை!

Default Image

ஹைதராபாத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் 2 பேருந்துகளில் பெங்களூரு வந்தடைந்தனர்.

இன்று மாலை 4 மணியளவில்,உச்சநீதிமன்ற உத்தரவின்படி, கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். 104 எம்.எல்.ஏக்களைக் கொண்ட பாஜகவுக்கு, பெரும்பான்மையை நிரூபிக்க எட்டு இடங்கள் தேவைப்படுகின்றன.

கர்நாடகாவில் தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைத்த காங்கிரசிற்கும், மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுக்க மறுத்த ஆளுநரின் செயலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. நேற்று இந்த வழக்கை விசாரித்த ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.போப்டே, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று மாலை 4 மணிக்கு எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும் என்றும், தற்காலிக சபாநாயகர் இதற்கான வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்றும், வாக்கெடுப்பு முறை குறித்து தற்காலிக சபாநாயகர் தீர்மானிப்பார் என்று நீதிபதி சிக்ரி கூறினார்.

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவை கூட்டப்பட்டு, புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போப்பையாவை ஆளுநர் வஜூபாய் வாலா நியமனம் செய்துள்ளார்.

2011ஆம் ஆண்டில் சபாநாயகராக இருந்த போப்பையா, எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 11 எம்எல்ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ததன் மூலம் ஆட்சியைக் காப்பாற்றியவர் ஆவார். அவையின் மூத்த உறுப்பினரே தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட வேண்டும் என்ற நெறிமுறைக்கு மாறாக போப்பையா நியமிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் புகார் கூறியுள்ளது .இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

Image result for கர்நாடகாவில் இரண்டு MLA க்கள் கடத்தல்

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றபின், மாலை 4 மணிக்கு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. 112 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே எடியூரப்பா அரசு தப்பும். பாஜகவுக்கு 104 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில், எதிர் அணியில் இருந்து 8 பேர் கட்சி அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அல்லது 15 எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திற்கு வராமல் தவிர்த்துவிட்டாலும் எடியூரப்பா அரசுக்கு ஆபத்து நீங்கும்.

காங்கிரஸ், மதச்சார்பற்ற எம்எல்ஏக்கள் சிலர் தங்களுடன்தான் இருப்பதாகவும், அவர்கள் ஆதரவின்றி தாங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாதல்லவா? என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கர்நாடகாவில் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டால், அதை தடுக்கும் முயற்சியாக காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் அனைவரும் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் நேற்று தங்க வைக்கப்பட்டனர்.

தற்போது  ஹைதராபாத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் 2 பேருந்துகளில் பெங்களூரு வந்தடைந்தனர்.பெங்களூரு தனியார் விடுதியில் காங்கிரஸ், ம.ஜ.த கட்சி எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்