கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான அரசு இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது. ஆயினும் 5 ஆண்டுகளுக்கு குமாரசாமியை ஆதரிப்பதாக காங்கிரஸ் கட்சி எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என்று துணை முதலமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசியலில் நேரிட்ட பரபரப்பான திருப்பங்களுக்கிடையே குமாரசாமி தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. அரசைக் கவிழ்க்க பாஜகவினர் ஆபரேசன் கமலம் என்ற பெயரில் சதித்திட்டம் தீட்டி வருவதாக குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் நடைபெறக் கூடும் என்ற அச்சத்தால், மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பெங்களூரின் ஹில்டன் போன்ற நட்சத்திர விடுதிகளில் பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 12 மணிக்கு சபாநாயகரைத் தேர்வு செய்ய உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்.
இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க காங்கிரஸ்-மஜத சட்டமன்ற உறுப்பினர்கள் சொகுசு பேருந்து முலம் கர்நாடக சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…