தேஜஸ்வி யாதவ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா கூட்டணி தலைவர்கள் பீகார் ஆளுநர் சத்யபால் மாலிக்கை சந்தித்து கடிதம் அளித்தனர்.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம்,காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கு மொத்தம் 117 இடங்கள் உள்ள போது தனிபெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் வாஜுபாய் வாலா அழைத்ததையடுத்து கோவா, பிஹார் ஆகிய மாநிலங்களிலும் மாற்றங்கள் கோரப்பட்டது.
காங்கிரஸ் கோவா கிளையும், பிஹாரின் ராஷ்ட்ரிய ஜனதாதளமும் இதே காரணத்தைக் காட்டி தங்களும் ஆட்சியமைக்கத் தகுதியானவர்கள்தான் என்று கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
கோவாவில் காங்கிரஸும் பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதாதளமும் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றன.
கோவாவில் 2017-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் வென்றது. இன்று கர்நாடகாவுக்கு ஒரு விதி எங்களுக்கு ஒரு விதியா என்று கோவா காங்கிரஸ் தலைவர் சந்திரகாந்த் கவ்லேக்கர் கூறியுள்ளார். அதாவது நாளை கோவா ஆளுநர் மிருதுலா சின்ஹாவிடம் தனது 16 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்துடன் கடிதம் அளிக்கப்போகிறேன் என்றார்.
அதே போல் நேற்று பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதாதள எம்.எல்.ஏ. தேஜஸ்வி யாதவ், தன் ட்விட்டர் பக்கத்தில் “பிஹாரில் நாங்கள் தனிப்பெரும் கட்சி மட்டுமல்ல, பிஹாரின் தேர்தலுக்கு முந்தைய மிகப்பெரிய கூட்டணியுமாவோம். ஏன் எங்களை ஆட்சியமைக்க அழைக்கக் கூடாது? என்று கேட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது தேஜஸ்வி யாதவ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா கூட்டணி தலைவர்கள் பீகார் ஆளுநர் சத்யபால் மாலிக்கை சந்தித்து கடிதம் அளித்தனர். அதில், தனிப்பெரும்பான்மையான தங்கள் கட்சியை ஆட்சியமைக்க அழைக்குமாறு கூறப்பட்டிருந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…