BREAKING NEWS:கர்நாடகாவை தொடர்ந்து பீகாரிலும் பாஜகவிற்கு ஆப்பு! தேஜஸ்வி யாதவ் ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநரிடம் மனு!

Default Image

தேஜஸ்வி யாதவ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா கூட்டணி தலைவர்கள் பீகார் ஆளுநர் சத்யபால் மாலிக்கை சந்தித்து கடிதம் அளித்தனர்.

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம்,காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கு மொத்தம் 117 இடங்கள் உள்ள போது தனிபெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் வாஜுபாய் வாலா அழைத்ததையடுத்து கோவா, பிஹார் ஆகிய மாநிலங்களிலும் மாற்றங்கள் கோரப்பட்டது.

காங்கிரஸ் கோவா கிளையும், பிஹாரின் ராஷ்ட்ரிய ஜனதாதளமும் இதே காரணத்தைக் காட்டி தங்களும் ஆட்சியமைக்கத் தகுதியானவர்கள்தான் என்று கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

கோவாவில் காங்கிரஸும் பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதாதளமும் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றன.

கோவாவில் 2017-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் வென்றது. இன்று கர்நாடகாவுக்கு ஒரு விதி எங்களுக்கு ஒரு விதியா என்று கோவா காங்கிரஸ் தலைவர் சந்திரகாந்த் கவ்லேக்கர் கூறியுள்ளார். அதாவது நாளை கோவா ஆளுநர் மிருதுலா சின்ஹாவிடம் தனது 16 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்துடன் கடிதம் அளிக்கப்போகிறேன் என்றார்.

அதே போல் நேற்று  பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதாதள எம்.எல்.ஏ. தேஜஸ்வி யாதவ், தன் ட்விட்டர் பக்கத்தில் “பிஹாரில் நாங்கள் தனிப்பெரும் கட்சி மட்டுமல்ல, பிஹாரின் தேர்தலுக்கு முந்தைய மிகப்பெரிய கூட்டணியுமாவோம். ஏன் எங்களை ஆட்சியமைக்க அழைக்கக் கூடாது? என்று கேட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது தேஜஸ்வி யாதவ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா கூட்டணி தலைவர்கள் பீகார் ஆளுநர் சத்யபால் மாலிக்கை சந்தித்து கடிதம் அளித்தனர். அதில், தனிப்பெரும்பான்மையான தங்கள் கட்சியை ஆட்சியமைக்க அழைக்குமாறு கூறப்பட்டிருந்தது.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்