இந்தியாவில் இன்று மட்டும் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 2 கோடிக்கு பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் நாடு தழுவிய அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது இதுவே அதிகபட்சம் என்பதாகும். இன்று பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், இன்று இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது. ஒரே நாளில் அதிக தடுப்பூசி சாதனை இந்தியாவுக்கு பிரதமர் மோடி அளித்த பரிசு என்று மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி ஒரு கோடியே 64 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியது தான் இதுவரை அதிகபட்சமாக இருந்த நிலையில், இன்று 2 கோடி பேருக்கு செலுத்தி புதிய சாதனை படைத்துள்ளது.
நாட்டில் இதுவரை மொத்தம் 77 கோடிக்கு அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்பது இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…